Monday, 2 April 2012


தெய்வப்பெண்ணாம் தேவதையோ!
அன்றி மயிலென எழில் வீசும் மங்கைதானோ!!
என மயங்கியோன்
மண்ணுறைப்பெண்மகள் இவளென ஓர்ந்து
மயக்கம் நீங்கி
எழிலுறை ஏந்திழைதனையே இனிது நோக்க.........


நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

கருங்குழல் பரவ செவ்வாய் மலர
செறி எயிற்றினள்
உதிர முயலும் முத்தென
முறுவல் தழுவ
கச்சற நிமிர்ந்தொளி வீசித்திரண்ட
இளமுலை வருத்தக்கொடியிடைத்துவள

மயிலியற்பெண்ணாள்
சிலிர்த்தெழும் விழியால்
ஏறினை

எதிரிடை நோக்க

தினவெடுத்தத்தோளினன்
திகைத்து நின்றனன்

எதிர்ப்படும் எவரையும்
தனித்துநின்றே
அழித்தொழிக்கும் திறத்தினள்
தெய்வப்பெண்ணாள்
பெரும்படை உடன்வர
சூழ்ந்து வளைத்து நின்றது போல்

தாக்கி வருத்தும்
மங்கையின் நோக்கினை
தாங்கும் திறனின்றி

பதைத்துளம் வியர்த்து
செயலற்று நின்றனன் 


இளம்பரிதியன் 

1 comment:

  1. அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...

    ReplyDelete