அன்பெனும் தென்றல் ஏறி எம் நெஞ்சமாம் கடலில் தோய்ந்து
நினைவினை நிதமும் மீட்டி நினைவெலாம் நீயேயானாய்
நினைவினை நீக்கநீக்க நின்நினைவலை பெருகல் கண்டேன்
உனை நிதம் மறப்பதற்கே உன் நினைவையே நாளும் கொண்டேன்
எனைஉடல் உயிரைப்போல காதலால் இறுகப்பற்றி தோய்ந்து
என்னிதயம் வென்றாய் வெல்வதே வெற்றி எனினும் தூயநற்
காதலிற் தோல்வியும் வெற்றிஎன்பர் தோல்வியைத் துணையாய்க்
கொண்டே மலர்ந்திடும் அன்பினாலே வெல்லுவேன் உன்னை நானே!
இளம்பரிதியன்
அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...
ReplyDelete