
வலிகொடுத்தும் புறந்தள்ளி
பூ உலகைக்காட்டி
தன்வலி குறைந்தும் அமுதூட்டி
என் வலிவைக்கூட்டி
ஞாலமே குறை சொலினும்நாளும் அணைத்து
கடு மொழி சொலினும் சோராது
அன்பே பொழிந்து
உலக வெளியினிலே
சிறகடிக்கும் திண்மை ஈந்து
காதல்தனில் எனை மறந்து
இணையுடன் யான் ஏகினும்
தன் உயிர் கரைத்து காற்றில் ஏற்றி
என்னுயிரைக்காக்கும்
கருணை தெய்வம் எந்தாய் போல்
எவருமுண்டோ?
அன்புடன் இளம்பரிதியன்
அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...
ReplyDelete