Monday, 2 April 2012


வலிகொடுத்தும் புறந்தள்ளி
பூ உலகைக்காட்டி 
தன்வலி குறைந்தும் அமுதூட்டி
என் வலிவைக்கூட்டி
ஞாலமே குறை சொலினும்
நாளும் அணைத்து
கடு மொழி சொலினும் சோராது
அன்பே பொழிந்து 
உலக வெளியினிலே
சிறகடிக்கும் திண்மை ஈந்து 
காதல்தனில் எனை மறந்து 
இணையுடன் யான் ஏகினும்
தன் உயிர் கரைத்து காற்றில் ஏற்றி
என்னுயிரைக்காக்கும்
கருணை தெய்வம் எந்தாய் போல்
எவருமுண்டோ?


அன்புடன் இளம்பரிதியன்

1 comment:

  1. அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...

    ReplyDelete