Monday, 2 April 2012


நினைவுகள்
நீ நினைத்தால் நீள் விழி நீந்தும்
இன்பக்காட்சியாய் நாளும் மாறும்

நிதம் மாறிடும் காட்சி மாறி
நினைவெலாம் நிறைந்த உன்றன்
எதிரிலே காட்சியாகும் 
காட்சியின் மாட்சி என்றும் 
இரண்டிலே ஒன்றைக்காணல்
இதயங்கள் ஒன்றிவிட்டால்
நினைவுகள் ஒன்றித்தழுவும்
ஒன்றுதல் ஒன்றே அன்பின் உயர்நிலை
அதனால் நாமும்
நினைவினை நீட்ட வேண்டா
நிதம் நிதம் ஒன்றி உயிராய்
மாந்துவோம் இன்பத்தேனை
அன்பினால் உலகை வெல்வோம்

இளம்பரிதியன்

1 comment:

  1. அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...

    ReplyDelete