Monday, 2 April 2012



அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு – குறள் 

மனம் மீட்டும் மாலை
தென்றல் தவழ் பொய்கை இடை 
தேன் சிந்தும் மலர்ச்சோலை
தலைவன் ஏறு என நடை பயில
எதிர் கொண்டாள் தலைவி

வாள் நீட்டி பகை அறுத்தோன்
சேள் நீளத்தனை இழந்தான்
மெய் மயங்கி
வியந்து நின்றான்

எழில்தனிலே வான் வியக்கும்
அன்னமும் நடை கேட்கும்
அரம்பைதான்
வழிமாறி வந்தனளோ?
தெய்வப்பெண்ணிவளோ?
வானவில்லின் நிறம் தேக்கி
வதியும் மயிற்கூட்டந்தனில்
ஆய்ந்தெடுத்த மயில் தானோ?
குழைத்தெடுத்த பொன்னாலே
புனைந்தெடுத்தக்காதணியை
சுமை போல அணிந்துறையும்
மானிடப்பெண்தானோ?

மயங்குதே என் நெஞ்சம்!!


இவண்
இளம்பரிதியன்
 

1 comment:

  1. அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...

    ReplyDelete